Saturday, November 13, 2010


கோபுர தரிசனம் - 1

திருக்கோயில்கள் என்றாலே நம் மனக்கண்முன் முதலில் வந்து நிற்பது கோயில் கோபுரங்கள் தான். கோயிலின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாத தருணங்களில் கூட கோயிலின் வெளியே நின்று கோபுர தரிசனத்திலேயே மனம் திருப்தி அடைவோர் உண்டு. திருக்கோயில் கோபுர தரிசனங்கள் அருகில் சென்றால் தான் கிடைக்கும் என்றில்லை. பல மைல் தூரத்துக்கு அப்பாலிருந்தும் கூட கோபுர தரிசனம் நமக்குக் கிடைக்கும் வண்ணம் அக்காலத்தில் கோயில் கோபுரங்களை கட்டி வைத்து உள்ளார்கள் புண்ணியவான்கள். நாங்கள் சென்று பார்த்த கோயில்களில் எடுத்த கோபுர படங்கள் சிலவற்றை மட்டும் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

மயூரநாதர் திருக்கோயில்,
மயிலாடுதுறை
அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்


கைலாசநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்கூடலழகர் திருக்கோயில்,
மதுரை


திருமால்பாடி டிரான்ஸ்பர் பெருமாள் திருக்கோயில்ஸ்தல ஸயன பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம்


மதுரை மீனாட்சி திருக்கோயில்முருதேஷ்வர் கோயில், கர்நாடகா


விஜயாசன பெருமாள் திருக்கோயில், நத்தம்திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயில்


மயான திருக்கடவூர் வனதிருப்பதி, திருநெல்வேலி


குடுமியான்மலை திருக்கோயில், புதுக்கோட்டை ஏரிகாத்த ராமர் திருக்கோயில், மதுராந்தகம்


சிருங்கேரி வித்யாசங்கரா கோயில், கர்நாடகாமஹா சரஸ்வதி அம்மன் ஆலயம், கூத்தனூர்


ஆலங்குடி குரு பரிகார ஸ்தலம்கஞ்சனூர் சுக்ரன் பரிகார ஸ்தலம்


லலிதாம்பிகை திருகோயில்,
திருமீயச்சூர்
நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி


கள்ளபிரான் சுவாமி திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம்திருஇந்தளூர் திருக்கோயில், மயிலாடுதுறை

திருக்கோயில் தரிசனத்தின்போது தெய்வத்தை மட்டும் நினைக்காமல், இத்தகைய வரலாற்றுச் சின்னங்களை நமக்காக கட்டிய அரசர்களையும், தங்கள் வியர்வை சிந்தி வேலை பார்த்தவர்களையும் சில நிமிடங்கள் நாம் நினைத்துப் பார்ப்பது அவர்களுக்கு நாம் செய்யும் ஆத்ம பரிபாலனம்.

ஸ்ரீரங்கத்து கோபுரங்கள் (கோபுர தரிசனம் - 2)

கோபுர தரிசனம் - 3

47 comments:

தமிழ் உதயம் said...

தேடி பிடித்து தந்திருக்கிறிர்கள். கோபுரங்களின் வனப்பை. நன்றி.

RVS said...

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்..

தரிசனம் செய்துவைத்த உங்களுக்கு நன்றி..

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ரமேஷ்.

நன்றி ஆர்.வி.எஸ்.

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு கோடி நன்றிகள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராம்ஜி.

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான பகிர்வு. மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

//திருக்கோயில் தரிசனத்தின்போது தெய்வத்தை மட்டும் நினைக்காமல், இத்தகைய வரலாற்றுச் சின்னங்களை நமக்காக கட்டிய அரசர்களையும், தங்கள் வியர்வை சிந்தி வேலை பார்த்தவர்களையும் சில நிமிடங்கள் நாம் நினைத்துப் பார்ப்பது அவர்களுக்கு நாம் செய்யும் ஆத்ம பரிபாலனம்.//

உண்மை. வரலாற்றுச் சின்னங்களை எனது புகைப்படக்கருவிக்குள் பதியும் போது அவற்றை வடித்தவர்களை நினைப்பது என் வழக்கமும்.

நல்ல பதிவு.

Pushpa said...

Nice post,thanks for sharing.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி,

//உண்மை. வரலாற்றுச் சின்னங்களை எனது புகைப்படக்கருவிக்குள் பதியும் போது அவற்றை வடித்தவர்களை நினைப்பது என் வழக்கமும்.//

அருமையான விஷயம். மிக்க நன்றி மேடம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Pushpa,
மிக்க நன்றி.

R. Gopi said...

மேடம், நீங்க உடையார் நாவல் படித்திருக்கிறீர்களா? அதில் கோவில் கட்டும் பணியைப் பற்றி மிக அழகாக எழுதி இருப்பார் பாலகுமாரன்.

அப்புறம் பார்க்கும் கோணங்களில் எல்லாம் கோபுரமாகவே இருக்கும் எங்கள் ஊர் கோபுரம் எதுவும் ஏன் பதிவில் இல்லை!

ஒரு கும்பகோணம் ஸ்பெஷல் போடுங்க! நன்றி!

Unknown said...

nice post

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gopi Ramamoorthy,
நீங்கள் கூறிய நாவலைப் படித்ததில்லை கோபி. குறித்துவைத்துக் கொண்டேன்.

கும்பகோணம் கோபுரங்களுக்காகவே ஒரு தனி பதிவு போடணும். கோயில் நகரத்தைப் பற்றி நிறைய பதிவு போடணும். விரைவில் கும்பகோணம் கோயில்களைப்பற்றி பதிவிடுகிறேன்.

மிக்க நன்றி கோபி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@சிநேகிதி,
மிக்க நன்றி.

Madhavan Srinivasagopalan said...

Nice collection..
chance to see all at a time.

thanks

விஜய் said...

புண்ணியம் எங்களுக்கும் உங்களுக்கும்

விஜய்

கோமதி அரசு said...

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள் பெரியோர்கள்.

ஒரே சமயத்தில் இத்தனை கோவில்களின் தரிசனம் கிடைக்க வைத்த உங்களுக்கு எங்கள் நன்றிகள்.

ஒவ்வொரு கோவில் போகும் போதும் கட்டியவர்களை நினைத்து அவர்களை நினைத்து அவர்கள் புகழ் வாழ்க என் வாழ்த்துவது என் பழக்கம்.
வியர்வை சிந்தி உண்மையாக பாடுபட்டு கட்டியவர்கள் குடும்பம் (தலைமுறைகள்)ஒரு குறையும் இல்லாமல் நன்றாக வாழவேண்டும் என்று இனி வாழ்த்தூகிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Madhavan,
மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@விஜய்,
நிச்சயமாக. மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு,
நீங்கள் கூறியிருப்பது நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் தான் கோமதியம்மா. மிக்க நன்றி.

Philosophy Prabhakaran said...

// இத்தகைய வரலாற்றுச் சின்னங்களை நமக்காக கட்டிய அரசர்களையும், தங்கள் வியர்வை சிந்தி வேலை பார்த்தவர்களையும் சில நிமிடங்கள் நாம் நினைத்துப் பார்ப்பது அவர்களுக்கு நாம் செய்யும் ஆத்ம பரிபாலனம் //
பினிஷிங் டச் சூப்பர் மேடம்...

இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் நீங்கள் எடுத்ததா... அல்லது கூகிளில் இருந்து எடுத்ததா...

புவனேஸ்வரி ராமநாதன் said...

அனைத்து புகைப்படங்களும் நாங்கள் எடுத்தது தான். மிக்க நன்றி பிரபாகரன்.

Gayathri Kumar said...

Lovely snaps. Thanks for sharing..

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி காயத்ரி.

a said...

//
தெய்வத்தை மட்டும் நினைக்காமல், இத்தகைய வரலாற்றுச் சின்னங்களை நமக்காக கட்டிய அரசர்களையும், தங்கள் வியர்வை சிந்தி வேலை பார்த்தவர்களையும் சில நிமிடங்கள் நாம் நினைத்துப் பார்ப்பது அவர்களுக்கு நாம் செய்யும் ஆத்ம ..பரிபாலனம்
//
Super.....

Menaga Sathia said...

thxs for sharing..lovely pics!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி யோகேஷ்.

மிக்க நன்றி மேனகா.

R.Gopi said...

GOPURA DHARISANAM.... KODI PUNNIYAM....

I would like to thank you for this great darshan..

DREAMER said...

அருமையான தொகுப்பு..! நிறையா மெனக்கெட்டிருக்கிறீர்கள்..! பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

'பரிவை' சே.குமார் said...

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

@DREAMER,
மிக்க நன்றி ஹரிஷ் நாராயண்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@சே.குமார்,
மிக்க நன்றி குமார்.

Unknown said...

கோபுரங்கள் அனைத்தும் கொள்ளை அழகு...

middleclassmadhavi said...

ஆசியாவில் உயர்ந்த கோபுரம் - திருவரங்கம் கோவில் விடுபட்டு விட்டதா?
அருமையான பதிவு. வாழ்த்துகள்.

Padhu Sankar said...

Looks superb!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

@middleclassmadhavi,
திருவரங்கம் கோயில் கோபுர புகைப்படம் என்னிடம் தற்போது இல்லை. அதனால் தான் விடுபட்டுவிட்டது. பின்னொரு பதிவில் இணைக்கிறேன். மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Padhu,
மிக்க நன்றி.

venkat said...

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி வெங்கட்.

தமிழ்க்காதலன் said...

கோடி புண்ணியம்ங்க உங்களுக்கு.... எம்மாடி...எத்தனை...! அத்தனை கோபுரங்களும் அழகு. அதுசரி. அது அந்த காலத்து தமிழனோட கலை. ம்ம்ம்ம்ம் இப்பத்தான் அந்த இனம் அழிந்து விட்டதே... ஏக்கப் பெருமூச்சுடன்... ஏங்கும் தமிழ்க்காதலன். நம்ம பக்கம் வந்துட்டுப் போங்க.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி தமிழ்க் காதலன்.

கே. பி. ஜனா... said...

நல்ல உபயோகமான பதிவு!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி ஜனார்தனன்.

அப்பாதுரை said...

கடைசி வரிகள் பொருத்தம்! அருமையான புகைப்படங்கள். கூடலழகர் கோவில் கோபுரத்திலேயே படிகளா? இதெல்லாம் பார்த்ததே இல்லை! ரொம்ப நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆம், கூடலழகர் கோபுரத்தில் படிகள் உண்டு. அதிலேறி மேலே சென்றால் கோயில் விமானத்தை பார்க்கலாம். விமானத்தை சுற்றியும் வரலாம். மாயவரம் கோயில் கோபுரம் உட்பட நிறைய கோயில் கோபுரங்களில் இதே வசதிகள் உண்டு. மிக்க நன்றி அப்பாதுரை.

ஜோதிஜி said...

ஆச்சரியப்பட வைத்த தொகுப்பு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி ஜோதிஜி.

Post a Comment

Related Posts with Thumbnails