Tuesday, August 31, 2010


மந்திரங்களின் மகிமைகள் - பகுதி 6

ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை !!!!
ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரு சரணம் சரணம்
ஞான னந்தா சரணம் சரணம்


காப்பு
ஆக்கும் தொழில் ஐங்கரனாற்றநலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே !

வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுக் கனவான தவம்
பெற்றும் தெளியார் நினையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க் கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

முத்து
முத்தே வருமுத் தொழிலாற் றிடவே
முன்னின் றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாஸினியே சரணம்
தந்தே யறிநான் தனயன் தாய்நீ
சாகா தவரம் தரவே வருவாய்
மத்தே றுததிக் கிணைவாழ் வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

பவளம்
அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னம் நடை செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிரம்ப வளம் பொழி யாரோ
தேம்பொழி லாமிது செய்தவ ளாரோ
எந்தையிடத்து மனத்தும் இருப்பாள்
எண்ணு வர்க்கருள் எண்ண மிகுந்தாள்
மந்திர வேத மயப் பொரு ளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

மாணிக்கம்
காணக் கிடையாக் கதியா னவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலி வானவளே
புனையக் கிடையாப் புதுமையானவளே
நாணித் திருநாமமும் நின்துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அரஹர சிவ என்றடியவர் குழம
அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

கோமேதகம்
பூமே வியநான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி யெனத்
திடமாய் அடியேன் மொழியுந் திறமும்
கோமே தகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்
மாமே ருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கனி பதும
ராகலி சாஸவி யாமினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேஸ ச்ருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

வைடூரியம்
வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையா றொலியொத் தவிதால்
நிலையற் றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற் றசைவற்றது பூதி பெரும்
அடியாற் முடிவாழ் வைடூரியமே
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

நூற் பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி யெல்லாம்
சிவரத்தினமாய்த் திகழ்வாரவாரே !!!!

Monday, August 30, 2010


பால்கறி

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு : 3
முருங்கைக்காய் : 2
தேங்காய் : 1/2 மூடி
பச்சை மிளகாய் : 5
சின்ன வெங்காயம் : 7 பல்
பூண்டு : 2 பல்
பொட்டுக்கடலை : 2 தேக்கரண்டி
சீரகம் : 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு

தாளிக்க:
கடுகு : 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு : சிறிதளவு
கடலைப் பருப்பு : சிறிதளவு
நல்லெண்ணெய் : 1 தேக்கரண்டி


செய்முறை:
முதலில் முருங்கைக்காய், உருளைக்கிழங்கு இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்றாகக் கொதித்தவுடன் அதில், முருங்கைக் காயைப் போடவும். முருங்கைக் காய் அரை வேக்காடு வெந்ததும், நறுக்கிய உருளைக் கிழங்கைப் போடவும்.

இதற்கிடையே, தேங்காய், பொட்டுக்கடலை, சீரகம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு இவற்றை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

முருங்கைக்காய், உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவினை கலந்து கொதிக்க விடவும். காயுடன் மசாலா நன்கு கலந்ததும், ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து கலக்கவும். பால்கறி தயார்.


இந்த பால்கறியை சாம்பார் சாதம், ரசம் சாதம், வெஜிடபிள் ரைஸ், பூரி, சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து உண்ணலாம். கார அடையுடன் சேர்த்து சாப்பிட ருசி அபாரமாக இருக்கும்.

Related Posts with Thumbnails