Tuesday, March 17, 2015


மன்னார்குடி ரயில்கள் - ஆன்ட்ராய்ட் மென்பொருள்

மன்னார்குடியிலிருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் மன்னார்குடிக்கு வரும் ரயில்களைப் பற்றிய விவரங்களைச் சுமக்கும் இலவச ஆன்ட்ராய்ட் மென்பொருள் MANNARGUDI TRAINS என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பயன்படுத்தலாம்.


மன்னார்குடிக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களின் கால அட்டவணை, இருக்கை நிலை மற்றும் கட்டண விவரங்களை இணைப்புகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பி.என்.ஆர் நிலையை அறியும் வசதியும் உள்ளது.

இந்த மென்பொருளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

MANNARGUDI TRAINS

Thursday, November 20, 2014


மன்னார்குடி - ஆன்ட்ராய்ட் மென்பொருள்

மன்னார்குடி மற்றும் காவிரி ஆற்றுப்படுகையிலுள்ள இருபது ஊர்களின் சிறப்புகளை விளக்கும் இலவச ஆன்ட்ராய்ட் மென்பொருள் MANNARGUDI என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பயன்படுத்தலாம்.


மன்னர்குடியைப் பற்றிய 18 வகையான தகவல்களை வரைபடக் குறியீடுகள் மற்றும் இணைப்புகள் மூலமாக இந்த மென்பொருள் விளக்குகிறது. கோயில்கள், திருவிழாக்கள், ஊர் சிறப்புகள், பிரபலங்கள் குறித்த விவரங்கள் தெளிவாக இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடிக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களின் கால அட்டவணை, இருக்கை நிலை, கட்டண விவரம் போன்றவற்றின் தகவல்கள் ஊர்வாசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள இருபது ஊர்களின் தகவல்களும் விரிவாக இடம்பெற்றுள்ளது.

இந்த மென்பொருளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

MANNARGUDI : THE PEARL OF KAVERI DELTA



Wednesday, June 25, 2014


கோபுர தரிசனம் - 4

நமது பெருமை மிகு திருக்கோயில் கோபுரங்கள், நமது கலைப் பொக்கிஷங்களாகவும், நமது கட்டிடக் கலையின் அடையாளங்களாக மட்டுமல்லாது, நம் தமிழர்களின் நுணுக்கமான அறிவியல் அறிவையும் உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளன. இதனை உணர்த்தும் விதமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி திருக்கோயில் கோபுரம் அமைந்துள்ளது.

காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி

மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலய கோபுரம். இக்கோயில் ராஜகோபுர வாசலில் அதிசயிக்கத் தக்க ஒரு நிகழ்வு அன்றாடம் நிகழ்கிறது. பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக இக்கோபுர வாசல் வரும் தென்றல், பக்தர்களை மேற்கிலிருந்து கிழக்காக வீசி வாரி அணைக்கிறது. அதே நேரத்தில் கோயிலின் உள்ளே செல்லும்போது எந்த வித செயற்கை தடுப்பும் இல்லாமலேயே கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசி நம்மை திருக்கோயிலின் உள்ளே தள்ளுகிறது. ஒரே நேர்க்கோட்டில் எந்த வித தடுப்பும் இல்லாமல் இரு பக்கங்களில் இருந்தும் காற்று வீசும் வண்ணம் இக்கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. எவ்வாறென்றால் இத்திருக்கோயிலின் வேறு எந்த பகுதியிலும் காற்று வீசாத நேரத்தில் கூட இந்த கோபுரத்தின் உள்ளே, கோபுர வாசலிலே காற்றின் ஆளுமை கண்ணுக்கு மட்டுமல்ல நம் உணர்வுகளுக்கும் விருந்து.

‌பிரஹ‌தீ‌ஸ்வர‌ர் திருக்கோயில்
கங்கைகொண்ட சோழபுரம்
கைலாசநாதர் திருக்கோயில்
பிரம்மதேசம், திருநெல்வேலி


திருவேங்கடமுடையான் திருக்கோயில்
அரியக்குடி, சிவகங்கை
தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
பட்டீஸ்வரம்


வடபத்திர சாயி ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில்
ஸ்ரீவில்லிபுத்தூர்
வைரவன் சுவாமி
திருக்கோயில்
வைரவன்பட்டி, சிவகங்கை


பிரகதாம்பாள் திருக்கோயில்
திருக்கோகர்ணம்
சங்கரநாராயணர் திருக்கோயில்
சங்கரன்கோயில்


சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்
காளையார்கோயில்
தட்சிணாமூர்த்தி திருக்கோயில்
பட்டமங்கலம், சிவகங்கை


பாபநாசநாதர் திருக்கோயில்
பாபநாசம், திருநெல்வேலி
சௌமியநாராயண பெருமாள்
திருக்கோயில், திருக்கோட்டியூர்


சீனிவாச பெருமாள் திருக்கோயில்
நாச்சியார்கோவில், குடந்தை
கொப்புடை நாயகி அம்மன்
திருக்கோயில், காரைக்குடி


கோபுர தரிசனம் - 1

ஸ்ரீரங்கத்து கோபுரங்கள் (கோபுர தரிசனம் - 2)

கோபுர தரிசனம் - 3

Related Posts with Thumbnails