Sunday, October 17, 2010


மந்திரங்களின் மகிமைகள் - பகுதி 8

விஜய தசமி விழா:
நவராத்திரி கொண்டாட்டத்தின் நிறைவு நாளில் பத்தாம் நாளில் கொண்டாடப்படும் விழா விஜதசாமி விழா. விநாயகருக்கு சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது போல ஆதி பராசக்திக்கு விஜதசாமி விழா கொண்டாடப்படுகிறது. மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மாவிடமும், அக்னிதேவரிடமும் வரங்களைப் பெற்றவன் எருமைத் தலையுடன் கூடிய மகிஷன் என்கிற அசுரன். பெண்களால் தனக்கு அழிவு வராது என்ற எண்ணத்தில், தனக்கு பெண்களால் தான் முடிவு வரவேண்டும் என வரம் பெற்றான். மகிஷாசுரனது ஆணவத்தை அடக்க முடிவு செய்து மும்மூர்த்திகளும் தங்கள் மனைவிகளாகிய பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரது சக்திகளை ஒன்றாக இணைத்து, துர்க்கை என்னும் மாபெரும் சக்தியை உருவாக்கினர்.

துர்க்கை அம்மன் மகிஷாசுரனை வதம் செய்தாள். ஆதிபராசக்தி துர்க்கை வடிவம் கொண்டு மகிஷாசுரனை வெற்றி கொண்ட தினமே விஜய தசமி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.


ஸ்ரீ துர்கா அஷ்டகம்:

வாழ் வுமானவள் துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் துர்க்கா இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

உலகையீன்றவள் துர்க்கை உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைகாப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்தையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

செம்மையானவள் துர்க்கா ஜெகமுமானவள்
அம்மையானவள் அன்பு தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

உயிருமானவள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பதிந்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

துன்பமற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்ப தோணியானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபயவீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

குருவுமானவள் துர்க்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்பதீபமே
திருவுமானவள் துர்கா திரிசூலிமாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

ராகுதேவனின் பெரும்பூஜை ஏற்றவள்
ராகுநேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னை காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

கன்னி துர்க்கையே இதய கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீர கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

ஆதி பராசக்தியே சரணம் !!

****************

அனைவரும் வாழ்வில் மென்மேலும் பல வெற்றிகளைப் பெற விஜயதசமி விழா நல்வாழ்த்துக்கள்.

10 comments:

Asiya Omar said...

விஜயதசமி வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேடம்.

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராம்ஜி.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. பல வருடங்களாக வெள்ளி தோறும் ராகு காலத்தில் நான் துதிக்கும் பாடல். விஜய தசமி வாழ்த்துக்கள் அனைவருக்கும்:)!

R. Gopi said...

பகிர்விற்கு நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி,
நன்றி மேடம். தங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்.

@Gopi Ramamoorthy,
நன்றி.

Thenammai Lakshmanan said...

நன்றி புவனா.. விஜயதசமி வாழ்த்துக்கள்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி தேனம்மை மேடம்.

Menaga Sathia said...

thx u!!

Post a Comment

Related Posts with Thumbnails