Thursday, December 29, 2011

கோபுர தரிசனம் - 3

தென்னகத்து திருக்கோயில்களின் பிரதான அடையாளமே, திருக்கோயில் கோபுரங்கள்தான். ஒவ்வொரு திருக்கோயிலின் வாசலில் மட்டுமல்லாது திருக்கோயிலின் உட்புறம் அமைந்துள்ள எல்லா சுவாமி சன்னதிகளுக்கும், சிறியது முதலாக பெரியது வரை கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயிலின் பிரதான ராஜ கோபுரத்தில் எல்லா விதமான சிலைகளும் வடிக்கப் பட்டிருக்கும். எல்லா கடவுள்களின் அவதாரம் முதல் அன்று வாழ்ந்த மனிதர்களின் அடையாளம் வரை கோயில் கோபுரத்தில் வடிக்கப்பட்டிருக்கும்.

ராஜகோபாலசுவாமி திருக்கோயில்
மன்னார்குடி
மார்க்கசகாய சுவாமி திருக்கோயில்
மூவலூர்


வானமாமலை திருக்கோயில்
நாங்குநேரி
சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில்
தாடிக்கொம்பு


ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருவெண்காடு
பிரகதீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்


மங்களாம்பிகை திருக்கோயில்
திருமங்கலக்குடி
ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில்
குணசீலம்


ஆமருவியப்பன் திருக்கோயில்
தேரழந்தூர்
சிவன் திருக்கோயில்
தேரழந்தூர்


முல்லைவனநாதர் திருக்கோயில்
பாபநாசம்
ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்
திருப்பைஞ்ஞீலி


சத்யகிரீஸ்வரர் திருக்கோயில்
திருமெய்யம்
பாலைவனநாதர் திருக்கோயில்
பாபநாசம்


தாமரைக்கண்ணன் திருக்கோயில்
திருவெள்ளறை
கோபுர தரிசனத்தில் இன்னொரு வசதியும் உண்டு. திருக்கோயிலின் உள்ளே செல்லாமலேயே கோபுரத்தை பார்த்தாலே தெரிந்துகொள்ளும் வண்ணம் அக்கோயில் மூலவரின் சிற்பம் கோபுரத்தின் வாயிலின் நேர் மேலாக செதுக்கப் பட்டிருக்கும். நாம் எந்த கோயில் சென்றாலும் கோபுரத்தின் அழகை கீழிருந்து மட்டுமல்லாது, திருக்கோயில் கோபுரத்தின் உள் பக்கமாகவோ, அல்லது வெளிப் புறமாவோ கோபுரத்தின் மேலே சென்று பார்க்க வசதியாக படிகள் அமைக்கப் பட்டிருக்கும். திருக்கோயில் பணியாளர்களைக் கேட்டால் அதன் விவரம் சொல்வார்கள். படிகள் ஏறி மேலே சென்று கோபுர அழகை காணும் போது ஏற்படும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

உதாரணமாக தஞ்சை பெரியகோவிலில், பிரதான கோபுரத்தின் உள் புறமாக படி ஏறிச் சென்று அதன் உள் கூட்டின் அமைப்பை தரிசித்து மகிழலாம். ஆச்சர்யத்தில் உறையலாம். நம் தமிழ் மக்களின், மன்னர்களின் அறிவுத் திறனுக்கும், கலை நயத்திற்கும், இந்த கோயில் கோபுரங்கள் ஒன்றே சாட்சியாகும். கோபுரத்தின் உச்சியில் அமைக்கப் பட்டிருக்கும் கலசங்களின் மேல் படும் சூரிய ஒளி பல வேதியியல் மாற்றங்களை உண்டாக்கி நமக்கு நன்மை பயப்பதாக சொல்கிறார்கள் முன்னோர்கள். இது போன்ற கிடைத்தற்கு அரிய பொக்கிஷங்களை பேணிப் பாதுகாப்பதே நம் இளைய தலைமுறையினரின் தலையாய கடமை எனலாம்.

கோபுர தரிசனம் - 1

ஸ்ரீரங்கத்து கோபுரங்கள் (கோபுர தரிசனம் - 2)

19 comments:

  1. இத்தனை கோபுரங்களையும் ஒருசேரத் தரிசிக்கச் செய்த உங்களுக்கு கோடிப்புண்ணியம். அருமை...

    ReplyDelete
  2. //நம் தமிழ் மக்களின், மன்னர்களின் அறிவுத் திறனுக்கும், கலை நயத்திற்கும், இந்த கோயில் கோபுரங்கள் ஒன்றே சாட்சியாகும். // நன்றாய்ச் சொன்னீர்கள்!
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    எனது சமீப பதிவு: http://kbjana.blogspot.com/2011/12/2012-gaiety-and-happiness-new-day.html

    ReplyDelete
  3. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

    ReplyDelete
  4. ரொம்ப நல்ல இருக்கு . நீங்க ஹிந்து கோயிலைப் பதிமாட்டும் எழுதின போதுமா ??? இஸ்லாமிய மட்டும் கிறிஸ்துவ மத கோயிலைப் பதியும் எழுதணும் . இது ஏன் தனிப்பட்ட கோரிக்கை !! இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  5. @ Kurinji .....

    மிக்க நன்றி குறிஞ்சி.

    ReplyDelete
  6. @ Madhavan Srinivasagopalan....

    ரசித்தமைக்கு மிக்க நன்றி மன்னை மைந்தரே.

    ReplyDelete
  7. @ கணேஷ் .....

    வாழ்த்துக்கு மிகவும் நன்றி கணேஷ்.

    ReplyDelete
  8. @ Rathnavel....

    வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  9. @ கே. பி. ஜனா...

    தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜனா.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  10. @ என்றும் இனியவன்...

    புத்தாண்டு வாழ்த்துக்கள் இனியவன். மிக்க நன்றி.

    ReplyDelete
  11. @ முரளி ஐயங்கார் ....

    கண்டிப்பாக எல்லா மதக் கோயில்களைப் பற்றியும்
    எழுதுவேன். நாம் உணவு உண்ண ஸ்பூன், fork, கை என எதைப் பயன்படுத்தினாலும் சாப்பிடுவது என்னவோ வாய்தானே. பலவித மார்கங்களை நாம் பின் பற்றினாலும் போய் சேர்வது என்னவோ
    ஓரிடத்தில்தானே. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி முரளி. தங்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. மறுபடியும் எழுதத் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்.
    படங்கள் பிரமாதம். மூலவர் கோபுரத்திலேயே செதுக்கப்பட்டிருக்கும் என்பது தெரியாம போச்சே! லைன்ல நின்னுட்டிருக்க வேண்டாமே?

    ReplyDelete
  13. மிக்க நன்றி.(°_°) __/\__

    ReplyDelete
  14. @அப்பாதுரை....

    தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அப்பாதுரை சார்.

    ReplyDelete
  15. @ Anonymous....

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  16. Pride of India...wonderful article dear. Appreciating your hard work on writing down the history of Temples with photos.

    ReplyDelete
  17. விக்கி டியர் உங்கள் வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. மிக்க நன்றி.

    ReplyDelete